கன்னியாகுமரியில் களைகட்டிய கோடை சீசன்; 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

author img

By

Published : Jun 22, 2022, 3:40 PM IST

கன்னியாகுமரியில் களைகட்டிய கோடை சீசன்; 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை!!

கன்னியாகுமரிக்கு கடந்த கோடை விடுமுறையின்போது கடந்த 12ஆம் தேதி வரை 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் படகில் சென்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்த்து சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஆண்டிற்கு மூன்று முக்கிய சுற்றுலா சீசன்கள் உள்ளன.

அதில் மிக முக்கிய சுற்றுலா சீசன் என்பது கோடை விடுமுறை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சுற்றுலா மையங்கள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால், இரண்டு ஆண்டுகள் கோடை விடுமுறைகளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால், இந்த முறை தளர்வுகள் கொடுக்கப்பட்டு அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்ட காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை களைகட்டியது முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, சூரியன் உதித்தல், மறைத்தல் காட்சிகளை காணும் காட்சி கோபுரம், சுற்றுலாப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோடை விடுமுறை நிறைவான கடந்த 12ஆம் தேதி வரை கன்னியாகுமரிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் படகுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பயணித்து உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால், வருமானமின்றி தவித்த வியாபாரிகளுக்கு இந்த முறை அமோக விற்பனை ஆனதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது - எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.