ETV Bharat / state

உடல் எடையைக் குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 4, 2023, 6:26 PM IST

Etv Bharat
Etv Bharat

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையைக் குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sriperumbudur youth death
உடல் எடையைக் குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (20). இவர், தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார்.

அந்த தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதன் காரணத்தால் உறவினர்கள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பப் பிரச்னையில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்.. தென்காசியில் நடந்தது என்ன

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.