ETV Bharat / state

சாலையில் விழுந்த மின்கம்பம் - 2 வடமாநிலத்தவர்கள் உயிரிழந்த கொடூரம்

author img

By

Published : Dec 10, 2022, 11:23 AM IST

சாலையில் விழுந்த மின்கம்பம்.. 2 வடமாநிலத்தவர்கள் உயிரிழப்பு
சாலையில் விழுந்த மின்கம்பம்.. 2 வடமாநிலத்தவர்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் மாண்டஸ் புயலினால், சாலையில் விழுந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 2 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில், மாண்டஸ் புயலின் காரணமாக பலத்த காற்று வீசியுள்ளது. இதில் மரம் ஒன்று முறிந்து மின் கம்பத்துடன் சேர்ந்து சாலையில் விழுந்துள்ளது. அப்போது சாலையில் நடந்து சென்ற இரண்டு வட மாநில இளைஞர்கள், சாலையில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் பிகார் மாநிலத்தைச்சேர்ந்த சுதன் குமார் மற்றும் நிரஞ்சன் குமார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினரும், மின்சார சேதங்களை சீர்படுத்தும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்களும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பாதை புயலால் சேதம் - சென்னை மாநகராட்சி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.