ETV Bharat / state

உத்திரமேரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது!

author img

By

Published : Mar 8, 2021, 9:17 PM IST

காவல்நிலையம்
காவல்நிலையம்

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள செங்குந்த பிள்ளையார் கோவில் தெருவில் பல ஆண்டுகளாகப் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்குப் புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று (மார்ச் 8) உத்திரமேரூர் தனிப்படை காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர். அப்போது அங்கு மல்லிகா என்பவர் தலைமையில் பாலியல் தொழில் நடைபெற்றுவந்தது தெரியவந்தது. பிறகு இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் மல்லிகா உள்பட நால்வரைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி இருவரைப் புழல் சிறையிலும், மற்ற இருவரையும் வேலூர் சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உத்திரமேரூர் எம்ஜிஆர் நகர்ப்பகுதியில் வசித்துவரும் பெண் பாலியல் தொழிலாளி ராணியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் ரூ.2.31 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.