ETV Bharat / state

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்

author img

By

Published : May 17, 2019, 8:54 AM IST

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் பக்தர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக பக்தர்கள் புடை சூழ நடைபெறுவது வழக்கம்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகலமாகத் தொடக்கம்

இதேபோல், இந்த ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் வியாழன் அன்றும், கருட சேவை வரும் ஞாயிற்றுக் கிழமையன்றும் நடைபெறவுள்ளது,

மேலும், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவுள்ளதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

*காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது*


*மிக முக்கிய உற்சவமாக கருட வாகன சேவை வரும் ஞாயிற்றுக் கிழமை அன்றும், திருத்தேர் உற்சவம் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் நடைபெறும்*




பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மிக முக்கிய உற்சவமாக கருடசேவை வாகனத்தில் வரதராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வானது பல வெளி மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு இந்த கருட சேவை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.


அதேபோல் திருத்தேரில் வரதராஜர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த ஆண்டு திருத்தேர் உற்சவம் வரும் வியாழன் அன்று நடைபெறும். இதில் திருத்தேரை உற்சவத்தை காண பல வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள்


இந்த வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும் கொட்டி பல்லாயிரக்கணக்கானோர் தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய வருவதை ஒட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.


பிரமோற்சவத்தையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Visual in MOJO 
TN_KPM_VARATHARAJAR KODIYETRRAM7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.