ETV Bharat / state

தெப்ப உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சிவரதர்!

author img

By

Published : Feb 23, 2021, 1:03 PM IST

varadaraja perumal
varadaraja perumal

காஞ்சிபுரம்: உலகப் பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி தென்னேரி ஏரி தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்திப்பெற்றதுமான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் கண்டருளுவார்.

தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதர்
அதன்படி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு 22 கி.மீ. தொலைவில் உள்ள தென்னேரி கிராமத்திற்கு வரதராஜ பெருமாள் வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரத்தில் கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக வந்து தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் மின் விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட தெப்பத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்பு மூன்று முறை தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். தெப்பம் உற்சவத்தைக் காண தென்னேரி கிராமத்தைச் சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டுவந்து தெப்பத்தில் வலம்வந்த வரதராஜ பெருமாளை தரிசனம்செய்து வழிபட்டுச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.