ETV Bharat / state

100 பைக், 30 கார்...! 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் புடைசூழ காஞ்சியை கலக்கிய வழக்கறிஞர்!

author img

By

Published : Mar 20, 2021, 10:13 AM IST

தேர்தல் செய்திகள்
காஞ்சிபுரத்தில் சுயேட்சை வேட்பாளர் அருள் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு சென்று சுயேச்சை வேட்பாளரான, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள் வேட்புமனு தாக்கல்செய்தார்.

காஞ்சிபுரம் விப்பேடு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் அருள், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக சுயேச்சையாகப் போட்டியிட முடிவுசெய்தார்.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், 30-க்கும் மேற்பட்ட கார்களிலும், 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆதரவாளர்களுடன் அரசியல் கட்சிகளுக்கு இணையாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேர்தல் அலுவலர் ராஜலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல்செய்தார்.

காஞ்சிபுரத்தில் சுயேச்சை வேட்பாளர் அருள் வேட்புமனு தாக்கல்

சுயேச்சை வேட்பாளர் 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு வந்து வேட்புமனு தாக்கல்செய்தது, காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 1087 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.