காஞ்சிபுரம் விப்பேடு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் அருள், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக சுயேச்சையாகப் போட்டியிட முடிவுசெய்தார்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், 30-க்கும் மேற்பட்ட கார்களிலும், 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆதரவாளர்களுடன் அரசியல் கட்சிகளுக்கு இணையாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேர்தல் அலுவலர் ராஜலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல்செய்தார்.
சுயேச்சை வேட்பாளர் 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு வந்து வேட்புமனு தாக்கல்செய்தது, காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 1087 பேருக்கு கரோனா!