ETV Bharat / state

இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர்!

author img

By

Published : Aug 1, 2019, 8:12 AM IST

Athivarathar

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துவருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்துவந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 05.20 மணியளவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதர்

நின்றக் கோலத்தில் அத்திவரதரைக் காண அதிகாலையிலிருந்தே பக்தர்கள், கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்த வண்ணம் உள்ளனர். இன்றைய தினம் அத்திவரதர் ஊதா நிற பட்டு ஆடையுடன் காட்சியளிக்கிறார். அதுமட்டுமில்லாமல், வசந்த மண்டபத்தைச் சுற்றிலும் பூக்களாலும், இழைகளால் செய்யப்பட்ட கிளிகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Intro:அத்தி வரதர் இன்று அதிகாலை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து அத்திவரதர் அவர்கள் சயன கோலத்தில் காட்சி அளித்திருந்தார் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இன்று அதிகாலை 5. 20 மணியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆகம விதிகளின்படி 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் சயன நிலையில் காட்சி அளித்து அருள் பாவித்து வந்தார் இதையடுத்து இன்று அதிகாலை 5 மணி 20 நிமிடங்களுக்கு காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் இன்றைய தினத்திலிருந்து நான்கு வரிசையாக பிரிக்கப்பட்டு அத்திவரதர் தரிசிக்க ஏதுவாக ஆங்காங்கு மேடைகள் அமைக்கப்பட்டு புதிதாக இரண்டு வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருகின்றன . நின்று கொண்டு இருக்கும் அத்திவரதர் அவர்கள் ஊதா நிற பட்டு ஆடையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் இன்றையிலிருந்த. நின்று கொண்டு காட்சியளிக்கும் அத்திவரதர் அவர்களைக் காண பொதுமக்கள் அதிகமாக அதிகாலை முதலே வரிசையில் நின்று காத்து கிடக்கின்றன. நின்று கொண்டு காட்சி அளிக்கும் அத்தி வரதரை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி வந்து கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் வசந்த மண்டபம் சுற்றிலும் அலங்காரத்தில் ஆங்காங்கே பூக்களால் நிறைந்து காணப்படுகிறது அத்திவரதர் காட்சி அளிக்கும் வாசல் முன்பாக அல்லிப்பூ மற்றும் இழைகளால் செய்யப்பட்ட கிளிகள் தொங்கவிடப்பட்டு ஆங்காங்கே பக்தர்களை பரவசமூட்டும் பூ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.