ETV Bharat / state

சட்ட விரோத மது விற்பனை - 3 பேர் கைது

author img

By

Published : Jul 26, 2021, 8:45 AM IST

Tasmac  kallakurichi news  kallakurichi latest news  three men arrest for selling liquor in black at kallakurichi  three men arrest for selling liquor in black  selling liquor in black  black liquor  kallakurichi black liquor sale  கள்ளக்குறிச்சி செய்திகள்  குற்றச் செய்திகள்  கள்ளக்குறிச்சியில் கள்ளத்தனமாக மது விற்ற மூவர் கைது  கள்ளத்தனமாக மது விற்ற மூவர் கைது  மது விற்பனை  மதுபானம்
மூவர் கைது

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் மதுப்பான கடைகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் நேற்று (ஜூலை 25) கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலை விஐபி கார்டனில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பெருவங்கூர் கிராம மதுப்பான கடையில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை கைது செய்தனர்.

மதுபானம் பறிமுதல்
மதுபானம் பறிமுதல்

கைது செய்யப்பட்ட நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருள், பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த மனோகர் ஆகிய மூன்று பேரிடமிருந்து, 100-க்கும் மேற்பட்ட மதுப்பான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: போலி நிருபர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.