ETV Bharat / state

மது பாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் மேற்பார்வையாளர்!

author img

By

Published : Apr 10, 2020, 11:15 AM IST

மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் மேற்பார்வையாளர்
மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் மேற்பார்வையாளர்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் மது பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் காவல் துறையினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஐந்து பேர் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் எம்.எஸ் தக்கா கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையின் மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர் ஏழுமலை என்பது தெரியவந்தது.

பாட்டில்கள் எடுத்துவரப்பட்ட அரசு டாஸ்மாக் கடை

இதையடுத்து முருகன், ஏழுமலை அவர்களுடன் வந்த ஐந்து பேர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மது பாட்டில்களை பதுக்கி வைக்கும் அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.