கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கண்டாச்சிமங்கலம், கொங்கராப்பாளையம், புதுஉச்சிமேடு, கூத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோர புளிய மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துவிழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரிய ஊழியர்கள் ஆகியோர் மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வைகோ வேண்டுகோள்