ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

author img

By

Published : Feb 10, 2021, 3:09 PM IST

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனை முன்பு உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில், சுமார் 30 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களையும் அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில உணவகங்களில் வெளியே இருந்த அடுப்பு மற்றும் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இந்த அதிரடி சோதனையில் சுமார் 30 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன.

இதையும் படிங்க: கூட்டுறவு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ. 2.15 லட்சம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.