dog peeling coconut: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணாநகர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது மனைவி, மகள்களுடன் வசித்துவருகிறார். உடன் லிட்டில் ஜானி என்ற நாயை வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் குடும்பத்தினருடன் பாசத்தோடு இருக்கும் ஜானி குடும்பத்தில் உள்ளவர்கள் கூறும், அனைத்து வேலையும் செய்துவருவதாகவும், தினசரி காலை நேரத்தில் வீட்டில் சமையலுக்குப் பயன்படும் தேங்காய்களை தாமாக முன்வந்து வாயால் கடித்து அதனை உரித்துவருவதாகவும், அதனால் அவர்களின் வேலை குறைவதாகவும் கூறுகின்றனர்.
இதனையடுத்து இளவரசன் வீட்டில் வளர்ந்துவரும் அவர்களின் செல்லக்குட்டி ஆக இருந்துவருகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் கூறியவுடன் தரையில் அமர்வது, நடைபயிற்சி செல்வது உள்பட தினசரி அவர்கள் கூறும் அனைத்துச் சொற்களுக்கும் கட்டுப்பட்டுச் செயல்படுவதாகக் கூறுகின்றனர்.
அதேபோல் பகல்நேர மட்டுமின்றி இரவு நேரத்திலும் இளவரசன் வீட்டைச் சுற்றிவரும் செல்லப்பிராணி ஜானி அந்த வீட்டின் மாடிப் படியில் ஏறிக்கொண்டு அங்குள்ள ஜன்னல் வழியாகத் தெருவில் நடந்துசெல்லும் நபர்களைக் கண்காணித்து வருமாம்.
யாரேதும் அடையாளம் தெரியாத நபர்கள், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் கண்டு குறைப்பதால் அந்தப் பகுதியில் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் வந்ததாகக் கருதி அப்பகுதி மக்கள் உஷாராக இருந்துவருவதாகவும் கூறுகின்றனர். செல்லப் பிராணியின் இந்தச் செயலை அக்குடும்பம் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Tnpsc group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ பாடத்திட்டம் வெளியீடு