கனியாமூர் பள்ளியில் 67 நாட்களுக்கு பின் மறு சீரமைப்பு பணி

author img

By

Published : Sep 19, 2022, 1:18 PM IST

மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 67 நாட்களுக்கு பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்திற்கு முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போராட்டக்கார்கள் பள்ளியின் பேருந்துகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், வாகனங்கள் சேதப்படுத்தினர்.

இந்த கலவர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிபிசிஐடியினர் விசாரணையை தொடங்கினர். அதனால் 67 நாள்களாக பள்ளி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்ததது. தற்போது வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால், பள்ளியில் சீரமைப்பு பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது

அந்த வகையில் நீதிமன்ற உத்தரவின்பேரிலும், மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பில் 45 நாட்களுக்கு சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகள் இன்று முதல் தொடங்கின. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் தொடங்கியது 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.