ETV Bharat / state

வேன் மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

author img

By

Published : Apr 8, 2021, 3:49 PM IST

வேன் மீது கார் மோதி விபத்து
வேன் மீது கார் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வேன் மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த 8 பேரும், காரில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

வேன் மீது கார் மோதி விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ்கோடி சென்ற பேருந்தை நடத்துனர் இயக்கியதால் விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.