ETV Bharat / state

பாலமலை வனப்பகுதியில் திடீர் காட்டு தீ!

author img

By

Published : Feb 9, 2021, 3:53 PM IST

ஈரோடு: பாலமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயைக் அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியில் திடீர் காட்டு தீ
வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அருகே பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தேக்கு, ஈட்டி, வேம்பு போன்ற விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற வனவிலங்குகளும் உள்ளன.

வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், கடும் வெயிலின் தாக்கத்தினாலும் இங்குள்ள மரங்கள் காய்ந்து இருந்தன. இந்நிலையில் எதிர்மேடு என்ற இடத்தில் திடீரென காட்டு தீ பற்றியது.

காற்றின் வேகத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 30 ஏக்கர் பரப்பில் தீ வேகமாக பரவியது.

இதனால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. தற்போது வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வணிக வளாகத்தில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.