ETV Bharat / state

பசியால் வாடியவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வு அமைப்பு!

author img

By

Published : Mar 25, 2020, 5:25 PM IST

உணவு வழங்கிய தன்னார்வு அமைப்பினர்
உணவு வழங்கிய தன்னார்வு அமைப்பினர்

ஈரோடு: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பசியால் வாடிய ஆதரவற்றோருக்கு தன்னார்வு அமைப்பினர் உணவு வழங்கினர்.

கரோனா வைரஸ் தாக்குதலில் பல ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், கரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வெளியே வராமல் தங்களது வீடுகளில் தனிமையில் இருந்துவருகின்றனர். இந்நிலையில், ஈரோடு நகரின் முக்கிய சாலைகளான பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவின்றி பசியால் வாடிய 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு, தன்னார்வு அமைப்பினர் உணவு, தண்ணீர் வழங்கினர்.

சாலையில் பசியால் தவித்த ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகர்களுக்கு உணவு வழங்கிய தனியார் அமைப்பினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உணவு வழங்கிய தன்னார்வு அமைப்பினர்

மேலும், 144 தடை உத்தரவு முடியும் வரையில் தங்களது அமைப்பின் சார்பாக ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உணவுகள் வழங்க உள்ளதாக தன்னார்வு அமைப்பினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.