ETV Bharat / state

தூய்மைப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஈரோடு மாநகராட்சி முடிவு - 6ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

author img

By

Published : Jun 28, 2023, 7:42 PM IST

தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி 6ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாநகராட்சிப் பகுதியில் குப்பைகள் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Etv Bharat 6 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Etv Bharat 6 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
6 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்; இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன் தினம் (ஜூன் 26) போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5ஆவது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் 6ஆவது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மைப் பணியாளர்கள் இன்று (ஜூன் 28) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையே 6ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ஈரோடு மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன. ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஆயிரத்து 800 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

500 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மட்கும் குப்பை, மட்காத குப்பை என தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச்சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளைத் தெருவோரம் வீசி சென்றுள்ளதால் குப்பைகள் மழை போல் தேங்கி நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை பேர்? ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

6 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்; இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன் தினம் (ஜூன் 26) போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5ஆவது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் 6ஆவது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மைப் பணியாளர்கள் இன்று (ஜூன் 28) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையே 6ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ஈரோடு மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன. ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஆயிரத்து 800 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

500 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மட்கும் குப்பை, மட்காத குப்பை என தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச்சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளைத் தெருவோரம் வீசி சென்றுள்ளதால் குப்பைகள் மழை போல் தேங்கி நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை பேர்? ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.