ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, "பள்ளிகள் திறப்பது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் கருத்தைப் பெற்று முதலமைச்சர்தான் முடிவு செய்வர். அதிகக் கட்டணம் பெற்ற பள்ளிகள் அவர்கள் பெற்ற கட்டணத்தை மாணவர்களிடையே திருப்பி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 900 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு மக்களுக்கு தேவையான திட்டம், பொங்கல் பரிசு வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தேர்தலில் சொல்வார்கள்" என்றார்.
இதையும் படிங்க: லாரி உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - விக்கிரமராஜா