ஈரோடு: தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாரதியாரின் திருவுருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதிக்கு ஒன்றிய அரசு இருக்கை அமைக்க இருப்பது வரவேற்கதக்கது. விவசாய சட்டம், மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநராக யார் வந்தாலும் மோடியின் ஏஜென்ட்கள் என்பதால் அவர்கள் ஏஜென்ட் வேலையை செய்வார்கள். சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி