ஈரோடு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு; இரண்டாவது தந்தை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!

author img

By

Published : Jun 30, 2022, 4:34 PM IST

girl rape case

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய சிறுமியின் இரண்டாவது தந்தை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர், புரோக்கர், மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த நபர் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் இரண்டாவது தந்தை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தாய் மற்றும் புரோக்கர் பெண் ஆகியோர் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தபட்டனர்.

வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆட்டை வைத்து சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.