ETV Bharat / state

இரண்டாவது நாளாக மழை வெள்ளம்.. சிக்கித் தவிக்கும் அந்தியூர்...

author img

By

Published : Oct 15, 2022, 1:53 PM IST

சிக்கித் தவிக்கும் அந்தியூர்...
சிக்கித் தவிக்கும் அந்தியூர்...

ஈரோடு மாவட்டம் அந்தியுர் சுற்றுவட்டாரப் பகுதிகள் இரண்டாவது நாளாக மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. மாணவர்கள் ஜேசிபியில் ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அண்ணாமடுவு பகுதியில் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் உபரிநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தியூரிலிருந்து ஈரோடு மற்றும் மேட்டூர் செல்லும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அவ்வழியாக கடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஜேசிபி எந்திரத்தில் பயணிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. மழை வெள்ள காலங்களில் ஆபத்தான முறையில் குழந்தைகள் பயணிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிக்கித் தவிக்கும் அந்தியூர்...

கடந்த இரண்டு நாளாக பெய்து வரும் கனமழையால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. வரட்டு பள்ளம் அணை உட்பட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

இதையும் படிங்க: மேட்டூர் அணையில் நீர் திறப்பு - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.