ETV Bharat / state

பெண் மீது தாக்குதல்: புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் கைது

author img

By

Published : Feb 3, 2023, 2:56 AM IST

Etv Bharat
Etv Bharat

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி அருகேவுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், மனோகரன். இவரது மனைவி கீதா (39). இவர், புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் மூர்த்தி மீது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “அதிமுக நகர செயலாளர் மூர்த்தி என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிமுக நகர செயலாளர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ஜல்லி திருடியதாக திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.