ETV Bharat / state

புதிய உச்சத்தில் மல்லிகை - சத்தியமங்கலத்தில் கிலோ ரூ.6000

author img

By

Published : Jan 14, 2023, 11:11 AM IST

jasmine flower price
புதிய உச்சத்தில் மல்லிகை

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் விலை கிலோ அதிகபட்சமாக ரூ.6000-க்கு விற்பனையானது.

புதிய உச்சத்தில் மல்லிகை - கிலோ ரூ.6000க்கு விற்பனை

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டதில் விளையும் பூக்களை சாகுபடி செய்து தினந்தோறும் சத்தியமங்கலம் மலர் சாகுபடி சந்தையில் ஏல முறையில் விற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 2 டன்னாக இருந்த நிலையில், தற்போது நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி அரை டன்னாக சரிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளதால், பூக்களை ஏலம் எடுப்பதில் விவசாயிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ கிலோ ரூ.4100 முதல் ரூ.6000 வரை விற்பனையாகிறது. நேற்று முன்தினம் கிலோ ரூ.2000 ஆக இருந்து மல்லிகை ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது. தினந்தோறும் கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து வருகிறது. இங்கு கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: நம் மண்ணின் கலைகளை வளர்ப்போம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.