ரூ.224 கோடி செலவில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடக்கம்

author img

By

Published : May 12, 2022, 7:43 PM IST

ரூ.224 கோடி செலவில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடக்கம்

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் ரூ.224 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

ஈரோடு: பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பவானி ஆற்றில் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுகுடிநீர் திட்டம் வகுக்கப்பட்டது.

ரூ.224 கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இத்திட்டத்தின் மூலம் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.49 லட்சம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இதையடுத்து இன்று(மே 12) காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, ஊராட்சி மன்ற தலைவர் நவமணி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கிணற்றில் இருந்து குடிநீர் ஆனது 29, 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் திங்களூர் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. 17.23 எம் எல் டி திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தின் மூலம் 4.49 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 16.40 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படும்.

இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.