ஈரோடு: திமுகவினர் தாக்கியதாக பாஜக நிர்வாகி புகார்

author img

By

Published : Nov 25, 2022, 10:37 AM IST

திமுகவினர் தாக்கியதாக பாஜக நிர்வாகி புகார்

ஈரோடு அருகே திமுகவினர் தாக்கியதாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

ஈரோடு: மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த பத்து கவுன்சிலர்களும், பாஜகவைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரும் என 15 நபர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த பேரூர் செயலாளர் சரவணன் என்பவரின் மனைவி செல்வாம்பால் உள்ளார்.

இந்த நிலையில் பேரூராட்சியில் தொடர் நிதி முறைகேடு நடப்பதாக பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். நேற்று முன்தினம் (நவ. 23) மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக சார்பில் பேரூராட்சி நிதி முறைகேடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

திமுகவினர் தாக்கியதாக பாஜக நிர்வாகி புகார்

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் செல்வாம்பால், அவரது கணவர் சரவணன் உள்ளிட்டோர் பாஜக கவுன்சிலர் சத்யாவின் கணவர் சிவசங்கரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

நேற்று (நவ. 24) மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு பாஜக கவுன்சிலர் சத்யாவின் கணவர் சிவசங்கர் புகார் அளிக்க வந்தார். அப்போது திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவில் உள்ளாட்சி பிரதிநிதி மேம்பாட்டு மாவட்டத் தலைவராக சிவசங்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொதுவெளியில் சிகரெட்.. இளைஞரிடம் ரூ.25000 பறிப்பு..! சிக்கிய ஊர்காவல் படை காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.