ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைக்கிராமத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
இங்கு விவசாயம் செழிக்கவும், யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் பக்தர்கள் விரதம் இருந்து கும்பேஸ்வரர் கோயிலில் குண்டம் திருவிழாவை நடத்துகின்றனர்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று (பிப்.25) தொடங்கியது. அப்போது சித்தூர் கும்பேஸ்வரர், ஆலமலை பிரம்மதீஸ்வரர் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
இன்று (பிப்.26) ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற்றது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை!