ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, எரிபொருள் சேமிப்பு, சாலை விதிகளைக் கடைப்பிடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கிளை மேலாளர், பணியாளர்கள் என 240 பேரை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5, 8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். பத்து, பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு 75 விழுக்காடு இருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும். அரசு நீட் தேர்வு மையம் தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் - ஃபோன்பே ஏடிஎம்