ETV Bharat / state

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... நான்காவது நபர் கைது...

author img

By

Published : Jun 4, 2022, 3:32 PM IST

Updated : Jun 10, 2022, 4:56 PM IST

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜூன் 3ஆம் தேதி நான்காவது நபரும் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டையை விற்ற கொடூரம்
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டையை விற்ற கொடூரம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு பெண், போலியான ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஜூன் 3இல் சிறுமியின் ஆதார் அடையாள அட்டையில் பெயர், வயதை போலியாக மாற்றிக்கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், சிறுமியை பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தபால் நிலையத்தில் புகுந்த நாகப்பாம்பு:லாவகமாகப் பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்!

Last Updated :Jun 10, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.