ETV Bharat / state

காதலனால் கைவிடப்பட்ட பெண் குழந்தையின் முன்பே தீக்குளித்து தற்கொலை!

author img

By

Published : Sep 1, 2020, 8:53 AM IST

suicide
suicide

திண்டுக்கல்: காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், தனது பிள்ளையின் கண் முன்னே பெற்ற தாய் தன்னையே எரித்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் மாலதி (32). இவர் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்துவந்தார். கணவரைப் பிரிந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு சதீஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு சதீஷுக்கு அவரது பெற்றோர் கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காட்டில் திருமணம் செய்துவைத்தனர். இதனால், மிகுந்த வேதனையடைந்த மாலதி, தனது மகனுடன் காதலன் வீட்டு முன்பு நியாயம் கேட்டுப் போராடினார்.

ஆனால், சதீஷின் பெற்றோர், உறவினர்கள் கடும் சொற்களால் மாலதியை அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது. கண்ணீர் விட்டு கதறி அழுதும் பயனில்லை - கணவனும் சரியில்லை, காதலனும் கைவிட்டுவிட்டான், ஆண் குழந்தையுடன் நிர்க்கதியாய் நிற்கும் அவலநிலைக்கு ஆளானார் மாலதி.

இதனால், மனமுடைந்த மாலதி, தனது குழந்தையின் கண் முன்னே, காதலன் வீட்டருகே தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தீக்குளித்து பெண் தற்கொலை

மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயல்கிறார். அதனைத் தடுக்க எவரும் முன் வரவில்லை. மனிதாபிமானம் இல்லாமல் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

தீவைத்துக்கொண்ட சில நொடிகளிலேயே தன்னை காப்பாற்றுமாறு கதறும்போதும், ஒருவர் காணொலி எடுக்கும் கொடுமையும் நிகழ்ந்துள்ளது. தாயை இழந்து வாடும் சிறுவனுக்கு தாய் இறந்ததுகூட தெரியாத நிலை கண்ணீரை வரவழைக்கிறது.

இதையும் படிங்க: வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை: தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.