பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

author img

By

Published : Sep 24, 2021, 7:52 AM IST

bribe

நத்தம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் வி.ஏ.ஒவாக பணியாற்றுபவர் தங்கவேல்,(52). இவரிடம் வத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னழகன் என்பவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு அனுமதி வழங்க, தங்கவேல் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சின்னழகன் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

vao
கைது செய்யப்பட்ட விஏஓ தங்கவேல்

அதன் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தங்கவேலுவிடம் சின்னழகன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் தங்கவேலுவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.