புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற தும்பா ஊர்வலம்!

author img

By

Published : Apr 3, 2021, 4:56 PM IST

தும்பா ஊர்வலம்
தும்பா ஊர்வலம் ()

திண்டுக்கல்லில் முதல் முறையாக உயிரிழந்த இயேசுநாதரின் உடலை தாங்கிய தும்பா ஊர்வலம் நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையானது ஏப்ரல் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி நேற்று (ஏப்ரல் 02) அனுசரிக்கப்பட்டது. இந்த புனித வெள்ளியானது, இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நிகழ்வாக கருதப்படுகிறது.

அவர் இறந்தபின் அவரின் உடலானது கல்லறையில் அடக்கம் செய்யப்படும். இந்த நிகழ்வானது பெரிய பேராலயங்களில் மட்டுமே நடைபெறும். முதல் முறையாக திண்டுக்கல் தூய வளனார் பேராலயம் பங்கு சார்பாக ஏசுநாதர் உடல் தாங்கிய தூம்பா ஊர்வலம் அந்த பங்கில் உள்ள லயன் தெரு, தெய்வசிகாமணிபரம், சேவியர் தெரு, ஆரோக்கிய மாதா தெரு, உள்பட்ட பல பகுதி ஆலயங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.

தும்பா ஊர்வலம்

இந்த இறுதி ஊர்வல நிகழ்வை தூய வளனார் பேராலய பங்கு தந்தை சகாயராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை ஜெயசீலன், குருமார்கள், கன்னியாஸ்திரிகள் ஏற்பாடு செய்தனர். இந்த தும்பா ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏசுநாதரின் பாடுகள், துதி ஆராதனை பாடல்களை பாடி சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாலை கல்லறையில் அடக்கம் நடைபெற்றது. மேலும் இன்று (ஏப்.3) இரவு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும் என்று பங்குதந்தை சகாயராஜ் கூறினார்.

இதையும் படிங்க: 'ஊழல் நரகத்தில் சிக்குண்ட தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்' - ஈஸ்டர் வாழ்த்தில் வைகோ நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.