ETV Bharat / state

அரசு பேருந்து, லாரி மோதல் - 3 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 25, 2021, 12:37 PM IST

மூவர் உயிரிழப்பு
மூவர் உயிரிழப்பு

பழனி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி நேற்று (செப் 24) சென்றது. பழனியை அடுத்த தாழையூத்து அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு, அருப்புக்கோட்டையை சேர்ந்த ருக்கிரபாண்டி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரி ஓட்டுநர் ரமேஷ் உள்பட பேருந்தில் பயணித்த 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாமிநாதபுரம் காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.