ETV Bharat / state

கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்ப்பு; பெண் உட்பட 3 பேர் கைது

author img

By

Published : Dec 16, 2022, 10:00 AM IST

கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்ப்பு
கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்ப்பு

கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மட்டும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டன் தினகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கரைக்காடு பகுதியில் ராஜா, மகேந்திரன் மற்றும் பெனாசீர் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் கஞ்சா செடிகள் எங்கு பயிரிட்டனர் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை பாலமலை வனப்பகுதியில் கஞ்சா வளர்ப்பு; முதியவர் உட்பட 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.