திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்

author img

By

Published : Aug 29, 2022, 5:11 PM IST

திருமணத்திற்கு செய்தித் தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்..!
திருமணத்திற்கு செய்தித் தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்..! ()

பழனியில் தங்கள் நண்பனின் திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திண்டுக்கல்: பழனியில் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நாளிதழ் வடிவில் நண்பர்கள் வைத்த பிளக்ஸ் போர்டு அனைவரையும் கவர்ந்துள்ளது. பழனி அடுத்த கோதைமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் கௌதம், இவர் சென்னையைச் சேர்ந்த வினிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களது திருமணம் பழனியில் நடைபெற்றது. திருமணத்திற்கு கௌதமின் நண்பர்கள் நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைத்து வைத்தனர். நாளிதழில் வரும் தலைப்பு செய்தி, விளையாட்டு செய்தி போன்ற வாசகங்களுடன், மணமகன், மணமகள் மற்றும் நண்பர்கள் படங்களை குற்றவாளிகள் போன்றும் வடிவமைத்து நண்பர்கள் வைத்திருந்த பேனர் திருமணத்திற்கு வந்த உறவினர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிரிப்பலையினையும் உண்டாக்கியது.

இதையும் படிங்க: 2ஆவது திருமணம் செய்துகொண்டேன், என்னைத்தேடாதீர்கள்... முதல் கணவனுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.