பாலியல் வன்புணர்வு: டீ மாஸ்டர் போக்சோவில் கைது

author img

By

Published : Dec 4, 2022, 10:53 PM IST

Updated : Dec 5, 2022, 9:16 AM IST

பழங்குடி சிறுமியை கர்ப்பமாகிய டீ மாஸ்டர் போக்சோவில் கைது!

திண்டுக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டீ மாஸ்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலை அருகே டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த ரமேஷ் (39) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சியமளா கொடுத்த புகாரின் அடிப்படையில், அமையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி விசாரணை நடத்தினார்.

பின்னர், நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஒருதலை காதல்; கல்லூரி மாணவர் விபரீத முடிவு!

Last Updated :Dec 5, 2022, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.