ETV Bharat / state

குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாம்

author img

By

Published : Jul 16, 2021, 6:26 AM IST

குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாம்
குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாம்

கொடைக்கான‌ல் அருகே பேத்துபாறை குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதும‌க்க‌ள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சிவீடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வாழை, காபி, அவரை, கேரட், பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மை காலமாக யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் நேற்று (ஜூலை 15) மாலை பேத்துபாறை குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டுயானை ஒன்று சுற்றிவந்தது.

வனத்துறையினர் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே வனப்பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களுக்குள் புகும் யானை கூட்டங்களை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.