ETV Bharat / state

இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்

author img

By

Published : Jun 2, 2021, 1:17 PM IST

இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்
இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்

திண்டுக்கல்: சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் சார்பில் பழனி அரசு மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பழனி அரசு மருத்துவமனைக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்படும் தட்டுப்பாடுகளை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் தனது சொந்த நிதியிலிருந்து 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை இலவசமாக வழங்கியுள்ளார். பழனி அரசு மருத்துவமனைக்கு 15 இயந்திரங்களும், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 10 இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்‌ ஐ.பி. செந்தில்குமார் வழங்கிய ஆக்சிஜன் இயந்திரங்களைப் பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? - முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.