ETV Bharat / state

அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்து காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

author img

By

Published : Dec 17, 2022, 10:55 PM IST

அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மின்சார அறையில் மருத்துவமனை ஊழியர் மின் விநியோகத்தைச் சரி செய்வதற்காகச் சென்றார்.

அப்போது அங்கிருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அங்கு பார்த்த போது அதில் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையின் முழுமையான விசாரணையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டவர் பாலசுப்பிரமணியன் என்பதும் இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அன்று இரவு காணாமல் போனதாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இறப்புக்கானக் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அத்தையை 10 துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞர்.. ஜெய்ப்பூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.