ETV Bharat / bharat

அத்தையை 10 துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞர்.. ஜெய்ப்பூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Dec 17, 2022, 6:52 PM IST

Etv Bharat
Etv Bharat

ஜெய்ப்பூரில் தனது அத்தையை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை அப்புறப்படுத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் வசித்து வந்தவர் சரோஜ். இவரது கணவர் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த டிச.11ஆம் தேதி மாலை இளைஞர் அனுஜ், தனது அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அதே நாளில், சரோஜின் மகள் பூஜாவை அழைத்து, சரோஜை காணவில்லை என்றும் இது குறித்து வித்யாதர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் சரோஜை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக அனுஜ் பூஜாவிடம் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜா, அனுஜ் கூறியதை நம்பவில்லை. கடந்த டிச.13ஆம் தேதி அனுஜுக்குத் தெரியாமல் பூஜா அனுஜின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அனுஜ் தனது சமையலறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துள்ளார். இதனைக் கண்ட பூஜா, எப்படி இங்கு ரத்தம் வந்தது எனக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தல் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதனால், சந்தேகமடைந்த பூஜா இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டை சோதனை செய்ததில் அனுஜ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: யூடியூபில் காய்கறி விளம்பரம் - ரூ.1.10 லட்சத்தை பறிகொடுத்த வியாபாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.