ETV Bharat / state

கனமழையால் இடிந்து விழுந்த வீடு: 82 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

author img

By

Published : Jun 6, 2021, 11:01 PM IST

கனமழையால் இடிந்து விழந்த வீடு: 82 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு
கனமழையால் இடிந்து விழந்த வீடு: 82 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

திண்டுக்கல்லில் பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இடையே சிக்கித் தவித்த 82 வயது மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 82 வயது மூதாட்டி தாமரை. கனமழையால் இவர் வசித்து வந்த வீடு இன்று இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி வீட்டிற்குள் சிக்கிக் கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் மாவட்ட தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கனமழையால் இடிந்து விழந்த வீடு: 82 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின் மூதாட்டியை உயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக அவரை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: செம்மொழியான தமிழ்மொழியே!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.