ETV Bharat / state

பிரசித்திப்பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

author img

By

Published : Sep 7, 2022, 7:55 PM IST

Etv Bharat
Etv Bharat

பிரசித்திப்பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் இன்று நடந்த கும்பாபிஷேகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்: பிரசித்திப்பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் இன்று (செப்.7) நடந்த மகா கும்பாபிஷேகத்தில் அமைச்சர் சக்கரபாணி உட்பட 50 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். நத்தத்தில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 4ஆம் தேதி முதல் இன்று 7ஆம் தேதி வரை பல கட்டமாக ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து நடந்த கோ பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் பா.வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோலாகலமாக நடந்த நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இக்கோயில் கும்பாபிஷேத்தில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.