ETV Bharat / state

தருமபுரி அருகே ஊருக்குள் புகுந்த யானையால் கிராம மக்கள் அச்சம்!

author img

By

Published : Jan 3, 2023, 7:49 PM IST

தர்மபுரி அருகே ஊருக்குள் புகுந்த யானையால் கிராம மக்கள் பீதி!
தர்மபுரி அருகே ஊருக்குள் புகுந்த யானையால் கிராம மக்கள் பீதி!

தருமபுரி பாலக்கோடு அருகே பேடறஅள்ளி கிராம குடியிருப்பு அருகில் இரட்டை காட்டு யானைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தருமபுரி அருகே ஊருக்குள் புகுந்த யானையால் கிராம மக்கள் அச்சம்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே வனப்பகுதிகளிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு யானைகள் வருவது தொடர்ச்சியாக உள்ளது.

பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து கடந்த வாரம் 2 யானைகள் கிராமப்பகுதிகளில் நுழைந்து சுற்றித்திரிந்து மத்திய மின்சார நிறுவனத்தில் நுழைந்து நாசம் செய்த நிலையில், இன்று காலை தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேடறஅள்ளி கிராமத்தில் குடியிருப்பு அருகில் இரட்டை யானைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இரட்டை யானைகளை வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.