ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!

author img

By

Published : Jul 13, 2022, 4:01 PM IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட காவிரி உபரி நீர், கடந்த மூன்று தினங்களுக்கு முன் தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

இதன் நீர்வரத்து தொடக்கத்தில் 25,000 கன அடியாக இருந்தது. படிப்படியாக உயர்ந்து நேற்று (ஜூலை 12) நீர்வரத்து ஒரு லட்சத்து 15,000 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தடை விதித்தார்.

தொடர்ந்து இன்று (ஜூலை 13) காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக உள்ளது. நான்காவது நாளாக குளிக்க, பரிசல் இயக்குவதற்கான தடை தொடர்கிறது. ஆற்றுப்பகுதியில் கால்நடைகளை அழைத்துச் செல்லவும், செல்பி எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!

மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காவிரியில் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.