தர்மபுரி: காரிமங்கலம் அடுத்த ஐயர்கொட்டாயை சேர்ந்தவர் விஜயகுமார்(19). இவர் தனது நண்பர்களுடன் விநாயகர் சிலையை கரைக்க நேற்று (செப். 2) தும்பலஹள்ளி அணைக்கு சென்றுள்ளார். அப்போது தரைபாலம் அருகே விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது, விஜயகுமார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக ஆற்றில் நடுவே இருந்த மரத்தை பற்றிக்கொண்டு நின்றார். இதையடுத்து பாலக்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து, 1 மணி நேரம் போராடி அவரை பாதுகாப்பாக மீட்டனர். இதனால் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலையத்திலும் 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்படும் விநோத விநாயகர்