தருமபுரி: கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமேதமாக சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வணங்கி வழிபட்டனர்.
இதனையடுத்து பக்தர்களுக்கும் லட்டு மற்றும் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. தருமபுரி சுற்றுப்பு கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி, விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் டிஎன்சி மணிவண்ணன், தருமபுரி நகர் மன்றத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 3 பேர் பலி!