17ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தருமபுரி தொகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்டவற்றிற்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தமாக 2,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன. பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது.