ETV Bharat / state

விட்டுக்கொடுத்த விசிக - நன்றி தெரிவித்த திமுக எம்.பி.,

author img

By

Published : Mar 11, 2022, 9:58 PM IST

நன்றி தெரிவித்த திமுக எம்பி!
நன்றி தெரிவித்த திமுக எம்பி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை தர்மபுரி திமுக எம்.பி., செந்தில் குமார் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தர்மபுரி : நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டு பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் விசிக சார்பில் அம்பேத்கர் என்பவர் போட்டியிட விசிக அனுமதி அளித்தது.

இதே வார்டில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆதரவாளர் குட்டி என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இங்கு திமுக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

தொல் திருமாவளவன், தர்மபுரி எம்பி
தொல் திருமாவளவன், தர்மபுரி எம்.பி.,

இதனையடுத்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், விசிக தலைவர் தொல் திருமாவளவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டை திமுகவுக்கு விட்டுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நன்றி தெரிவித்த திமுக எம்பி
நன்றி தெரிவித்த திமுக எம்.பி.,

அதன்படி, விசிக தலைமை 10ஆவது வார்டினை, திமுகவுக்கு விட்டுக் கொடுத்தது. இந்த வார்டில் தர்மபுரி திமுக எம்.பி.யின் ஆதரவாளர் குட்டி என்பவர், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குட்டி ஆகியோர் தொல். திருமாவளவனை சந்தித்து தனது கோரிக்கையை ஏற்று இடத்தைவிட்டு கொடுத்ததற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அம்பேத்கரும் உடனிருந்தார்.

இதையும் படிங்க : குப்பை அரைக்கும் தொழிற்சாலை - பொதுமக்கள் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.