தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே முள்ளுவாடி ஏரி உள்ளது. பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட இந்த ஏரியானது 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரியில் சுண்ணாம்புக்கார தெரு, கிருஷ்ணாபுரம், வாணியத்தெரு, மணியாக்கார தெரு, கடை வீதி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த சாக்கடைக் கழிவுகளும் நேரடியாகக் கலக்கின்றன.
மேலும், அழுகிய பழங்கள், நெகிழிப் பொருள்கள், மருத்துவக் கழிவுகள் ஆகியவை ஏரியில் கொட்டப்படுவதால் ஏரிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் கழிவுநீர் கலந்ததோடு, சுற்றுவட்டாரப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது, ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால், ஏரியை தூர்வார வேண்டும் எனவும், ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு