குடும்ப பிரச்சினை காரணமாக பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

author img

By

Published : Sep 12, 2022, 10:04 PM IST

விருத்தாச்சலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் தற்கொலை

விருத்தாசலத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக சகீராபானு எனும் பெண் தனது மகன், மகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்: விருத்தாசலம் எஜமான் நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி சகீராபானு (40), 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (12), 5 -ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி(10)ஆகியோருடன்,எஜமான் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு (செப்.11) வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கினர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து உறங்கியுள்ளார். அவரது மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் குமார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தாய் மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு கதறி அழுத குமார், உடனடியாக கூச்சலிடத் தொடங்கினார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூவரது உடல்களையும், மீட்டு உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த மூன்று மாதமாகப் பிரச்சினை இருந்து வந்ததாகவும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என கூறப்படுகிறது.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதனால் மனமுடைந்த குமாரின் மனைவி, தனது மகன், மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விடப்பட்டதாகவும், அதன் பின்னர் சகீரா பானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் எடுக்காத பணத்திற்கு எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி: உரிமையாளர் தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.